தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக, உங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள். எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ.
தேர்வுகளுக்காக நீங்கள், தனியாக கைடு, புத்தகம் என்று எதையும் வாங்க வேண்டிய தேவையில்லை. பதிலாக, குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களையும், குரூப் 2-க்கு அதோட சேர்த்து +1,+2 வரலாறு, புவியியல் புத்தகங்களை படித்தாலே போதுமானது.அடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண் வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.
குரூப் 2, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் 1 1/2 மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும்.
பாடவாரியாக மதிப்பெண் விவரம் :
பொது தமிழ் – 100 கேள்விகள்
அறிவியல் 20 கேள்விகள்
கணக்கு – 10 கேள்விகள்
வரலாறு – 10 கேள்விகள்
புவியியல் – 10 கேள்விகள்
பொருளியல் – 10கேள்விகள்
பொது அறிவு – 20 கேள்விகள்
இதர கேள்விகள் – 10 கேள்விகள்
எந்தெந்த பாடங்களில் எந்தெந்த பகுதியை நன்றாக படிப்பது :
பொது தமிழ் பாடத்தில், அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்; அகர வரிசை, ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல்;
சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்… இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும்.
கணக்கு பாடத்தில் முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு…இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது.
பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது.
அதிகமாக படித்து, ஒன்றும் தெரியாமல் போவதைவிட, தேர்ந்தெடுத்த புத்தகங்களை படித்து, நிறைவாக எழுத்துகள் வெற்றி நிச்சயம்.